சச்சினை விட பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் விஷி ஆனந்த் - ஏன்? எனது Deccan Chronicle கட்டுரை
இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.
It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.
It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
11/24/2013 02:25:00 PM
7
மறுமொழிகள்
Labels: Vishy, பதிவர் வட்டம், மாமனிதர்கள், விளையாட்டு, விஸ்வநாதன் ஆனந்த்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
11/17/2013 10:25:00 PM
1 மறுமொழிகள்
Labels: பதிவர் வட்டம், பாரத ரத்னா, மாமனிதர்கள், விளையாட்டு, விஸ்வநாதன் ஆனந்த்
செஸ் விஸ்வநாதன் ஆனந்துக்கு ‘உலக நாயகன்’ என்பது கமலுக்கு ரவிக்குமார் வழங்கிய பட்டம் போன்றதன்று. அவர் அங்கீகரிக்கப்பட்ட செஸ் உலக நாயகன், 5 முறை அப்பட்டத்தை வென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும், 2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.
ஆனந்த்-கெல்ஃபாண்ட் 2012 உலக சேம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டங்கள் அத்தனை சிலாகியமில்லை என்று கூறலாம். ஆனந்த் தனது attacking, aggressive அணுகுமுறையை கைவிட்டு, சற்றே பாதுகாப்பு ஸ்டைலில் விளையாடியதை கார்போவ், கேஸ்பரோவ் உட்பட சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். கேஸ்பரோவ் ஆனந்த் ஒய்வு பெறலாம் என்று கூட கூறினார்.
ஆனந்துக்கு 43 வயது ஆன பின்னும், அவரால் இந்தியாவில் ஒரு செஸ் மறுமலர்ச்சி உண்டான பின்னும், பல கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உருவாகி இருந்தாலும், அவரது
செஸ் திறன், மன வலிமை, சேம்பியன் குணம் (இவற்றில் ஓரளவு) கொண்ட ஒரு செஸ்
ஆட்டக்காரர் கூட இந்தியாவில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பது தான்
யதார்த்தம். மற்ற விளையாட்டுக்களில், இந்தியாவில், சேம்பியன் தரத்தில்
ஒருவருக்கு மேல் இருந்தாலும் (டென்னிஸ்- லியாண்டர், மகேஷ், பாட்மிண்டன்
-சாய்னா, சிந்து, கிரிக்கெட்- பலர், தடகளம்- உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ்...),
செஸ்-ஐ பொறுத்தவரை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, ஆனந்த் ஒருவர் தான்
உலகத்தரம் கொண்ட ஒரே சேம்பியன் ஆட்டக்காரர்.
ஆனால், மற்ற நாடுகளில், சிலபல குறிப்பிடத்தக்க ஆட்டக்காரர்கள், உலகத் தரத்தில் உருவாகியிருக்கிறார்கள் - லெவான் ஆரோனியன், ஹிகரு நாக்கமுரா, ஃபேபியானோ, செர்கி கராக்கின், மோரோசவிச், மைக்கேல் ஏடம்ஸ், க்ரைசக் அலெக்ஸாண்டர், எடின் பேக்ராட், வேங்க் ஹோ, மமெடயரோவ் போன்றவர்கள்.
சரி, கார்ல்சனுக்கு வருவோம். அவருக்கு 7வது வயதில் தான் செஸ் மேல் ஆர்வம் ஏற்பட்டது. மிக குறுகிய காலத்திலேயே, தனது சற்றே தடாலடி ஆட்டத்தாலும், வித்தியாசமான ஓப்பனிங் அணுகுமுறையாலும் பலரையும் தன் பால் ஈர்த்து விட்டது நிஜம். அதே கார்ல்சன் தனது 12-வது ஏதோ ஒரு செஸ் போட்டியில் சரியாக விளையாடாமல், சுய பச்சாதாபத்தில். “இப்படி செஸ் ஆட்டத்தில் துளித் திறமையின்றி நான் ஏன் பிறந்தேன்?!?” என்று தன்னையே நொந்து கொண்டுள்ளார் :-)
8 வருடங்களுக்குப் பின், அவர் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரர் (ரேட்டிங் புள்ளிகள் 2872, செஸ் வரலாற்றில் கேஸ்பரோவ் உட்பட யாரும் தொடாத சிகரம் இது) ஆனது மட்டுமன்றி, ஒரு மெகா ஸ்டாராக, விளம்பரங்கள், தோற்றங்கள் வாயிலாக 2013-ல் 3.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்தார். கேஸ்பரோவைப் போலவே, ஆனால் தனது 22-வது வயதிலேயே, டைம் பத்திரிகையின், உலகில் மிக்க செல்வாக்கு கொண்ட டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கார்ல்சன்.
கார்ல்சன் மார்ச் 2013-ல் நடந்த, உலகின் டாப் 8 ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட மிகக் கடினமான Candiates tournament-ல் முதலிடம் பெற்று, ஆனந்துக்கு போட்டியாளராக (challenger) அறிவிக்கப்பட்டார். யார் ஆனந்துக்கு போட்டியாளராக வருவார் என்பதை கடைசி சுற்று வரை சொல்ல முடியாத அளவுக்கு, த்ரில்லிங்காகவும், பல அருமையான ஆட்டங்கள் கொண்டதாகவும் இந்த Candiates tournament இருந்தது. இறுதி 3 சுற்றுகளில் 2 தோல்விகளை கார்ல்சன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் இதை கவனத்தில் கொள்வது மிக அவசியம் :-)
போட்டி முடிவில் அவரும் கிராம்னிக்கும் சம புள்ளிகளில் (8.5/14) இருந்தும், அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற கணக்கில், கார்ல்சன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்! ஆனந்தே, இதை Best ever Candidates tournament in history என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Candidates tournament ஆட்டங்களை இங்கே ஆடிப்பார்க்கலாம்!
http://www.chessgames.com/perl/chess.pl?tid=80233
இவற்றில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது இவை:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1712941 - Aronian vs Gelfand
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713231 - Svidler vs Carlsen
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713866 - Aronian vs Kramnik
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713636 - Carlsen vs Ivanchuck
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713488 - Gelfand vs Aronian
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714070 - Carlsen vs Svidler
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714073 - Ivanchuck vs Kramnik
கார்ல்சனின் செஸ் வலிமைகள், அவரது பயமின்மை, டிராவுக்கு (draw) ஆடாமல் கடைசி வரை போராடும் குணம், வித்தியாசமான தொடக்க ஆட்ட அணுகுமுறைகள், தன்னம்பிக்கையும், உடல் திடமும் தரும் மனவலிமை ஆகியவை. சமீபத்தில் நடந்த Sinquefield Cup போட்டி ஆட்டத்தில், கஷ்டமானதொரு பொசிஷனிலிருந்து திறமையாக தப்பித்து, ஆட்டத்தை சமநிலைக்கு எடுத்து வந்து, லெவன் ஏரோனியன் டிரா கேட்டும் தர மறுத்து, மெல்ல மெல்ல தனது பொசிஷனை பலப்படுத்திக் கொண்டு, 70 நகர்த்தல்களுக்குப் பின் கார்ல்சன் ஆட்டத்தை வென்றார். ஒரு மலைப்பாம்பு தனது இரையை சுற்றிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிச் சாகடிக்கும் விதத்துக்கு நிகரானது இது!
”Carlsen is also one of the most talented players from any generation. He will be ridiculously difficult to play against” என்று ஒப்புக் கொள்ளும் ஆனந்த், தான் under dog ஆக குறிப்பிடப்படுவது பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை என்றும், தனது உழைப்பு, ஆற்றல், அனுபவம் இவற்றைக் கொண்டு போட்டியை நல்ல முறையில் எதிர்கொள்வதில் மட்டுமே தனது கவனம் முழுதும் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்தின் மேல் தற்போது லேசான கடுப்பில் இருக்கும் கேஸ்பரோவ், கார்ல்சனுக்கு ஆலோசகராக இருப்பது, கார்ல்சனுக்கு பலன் தரும் விஷயமே! கார்ல்சனுக்குத் தான் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறும் கேஸ்பரோவ், ஆனந்தை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
இறுதியாக, ஆனந்த் 2008, 2010-ல் விளையாடியது போல தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடி, நடு ஆட்டத்தில் (middle game) நுழையும்போது, சற்றே சாதகமான பொஸிஷனுடன் இருக்க வேண்டியது அவசியம். அது போல, வெள்ளைக் காய்களோடு விளையாடும்போது, aggression, சில சமயங்களில் novelty, அவசியம். மெத்தனமாக (passive) ஆடினால், கார்ல்சன் கை ஓங்கி விடும் அபாயம் உள்ளது. இந்த செஸ் உலகப்போட்டி, ஃபிஷர் vs ஸ்பாஸ்க்கி, காஸ்பரோவ் vs கார்போவ் உலகப் போட்டிகளுக்கு நிகரான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
நேரம் கிடைக்கும்போது, போட்டியின் interesting ஆட்டங்கள் குறித்து எழுதலாம் என்ற உத்தேசம் இருக்கிறது. பார்க்கலாம்!
எ.அ.பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
11/07/2013 05:59:00 PM
3
மறுமொழிகள்
Labels: chess, பதிவர் வட்டம், விளையாட்டு, விஸ்வநாதன் ஆனந்த்
’பெருமாளுக்குத் தீட்டு’ புகழ் தேவநாத சுவாமி கோயிலில் (கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்), இன்னொரு மகாஅவலம் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்திருந்தாலும், இப்போது தான் அது கலெக்டர் (மனு வடிவில்) வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்! இக்கோவிலுக்கு அருகில், ”குரு பரம்பரை”யின் கடை ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு கோயில் ஒன்றுள்ளது. பல ஆண்டுகளாக, ஐப்பசி மாதம் நடைபெறும் மாமுனிகளின் உத்சவ சமயம், அவரது விக்ரகத்தை வீதி ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உள்ளது. மாமுனிகளின் விக்ரகம் தேவநாத சுவாமி கோயில் முன் வருகையில், கோயில் கதவு மூடப்பட்டு விடும். அதாவது பெருமாள் மணவாள மாமுனிகளை பார்த்தால், பெருமாளுக்குத் தீட்டும் தோஷமும் ஏற்பட்டு விடுமோ என்னவோ?!?!
வைணவ திவ்யதேசமான தேவநாத சுவாமி ஆலயம் வடகலை சம்பிரதாயக் கோயில், மணவாள மாமுனிகள் தென்னாச்சார்ய வழி ’குரு பரம்பரை’யின் கடைசி குரு. உடையவர் இராமானுஜரின் அவதாரமாகவும் (ஏராரும் எதிராசன் என உதித்தான்) அரங்கநாதர்க்கே குருவாகவும் கருதப்படுபவர். அதாவது, பெருமாளில் தொடங்கி, மாமுனிகளில் முடியும் குரு பரம்பரையானது ’ஆச்சார்ய ரத்தின மாலை’ போன்றது. மாமுனிகள் வைணவம் சார்ந்த பல சிறந்த கிரந்தங்களை இயற்றியுள்ளார்.
கோயில் கதவுகளை மூடி, வைணவம் தழைக்க வந்த ஒரு பெருந்தகையை இப்படி அவமானப்படுத்துவது கூட ஒரு வகையான தீண்டாமையே என்றும், மணவாள மாமுனிகள் ஊர்வலம் செல்கையில் பெருமாள் கோயில் கதவுகளை மூடக்கூடாது என்றும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரட்சண சபையின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசரும், இன்னும் சிலபல பக்தர்களும் கலெக்டரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், இந்த ஆண்டு கோயில் கதவுகள் மூடப்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
அப்படியும், இந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று கலை 9 மணி அளவில், மணவாளமாமுனிகள் விக்ரகம், ஊர்வலமாக தேவநாத சுவாமி கோயிலைக் கடக்கையில், கோயில் கதவுகள் மூடப்பட்டன. இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும் நிகழ்ந்து போலீஸ் வந்து அமைதிபடுத்த வேண்டியிருந்தது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் அதிர்ந்து போய் இதை கவனித்துக் கொண்டிருந்தனர். கோயில் பணியாளர்கள் இருவர், இந்த அவலக் கூத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகை சார்ந்த புகைப்படக்காரர்களை மிரட்டி, அவ்விடத்தை விட்டு துரத்த முயன்றுள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் உச்சம், கோயில் தலைமை அதிகாரி, “மணவாள மாமுனிகள் ஊர்வலத்தின்போது கோயில் கதவுகளை மூடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் (கடவுளே, கடவுளே, கடவுளே!!!!!) இந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அனாவசியமாக இதை ஒரு பிரச்சினை ஆக்கியிருக்கிறார்” என்று சொல்லியிருப்பது தான்!
இவர் போன்ற ஆட்களையும், அண்ணல் இராமானுஜர் போதித்த வைணவத்துக்கு உரித்த விரிந்த நோக்கமும், அடக்கமும், புரிதலும், அடியார்க்கு அடியராய் இருக்கும் பண்பும் அறவே இல்லாத இந்த கோயில் அர்ச்சகர்களையும்அந்த தேவநாதப் பெருமாள் கூட திருத்த முடியாது!!!
வடகலையாருக்கு மணவாள மாமுனிகள் ஆகாமல் போனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது சற்றே நீண்ட சமாச்சாரம் என்பதால், விவரமாக அடுத்த இடுகையில் சொல்கிறேன். பொறுத்திருக்கவும்.
எ.அ.பாலா
பிற்சேர்க்கை: இதை வடகலை vs தென்கலை சண்டை சச்சரவாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், பார்ப்பனர் அல்லாத வைணவர் பலரும், இராமானுஜரைப் போலவே, மணவாள மாமுனிகளையும் வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய, வைணவம் தழைக்க அவதரித்த, ஒரு மகானாகவே கருதி, பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறும் மாமுனிகளின் திருநட்சத்திர வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
11/01/2013 07:23:00 PM
11
மறுமொழிகள்
Labels: ஆன்மிகம், எ.அ.பாலா கருத்து, சமூகம், பதிவர் வட்டம், ஸ்ரீவைஷ்ணவம்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
10/17/2013 09:58:00 AM
3
மறுமொழிகள்
Labels: cricket, sachin, கிரிக்கெட், பதிவர் வட்டம், விளையாட்டு
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
7/29/2013 03:32:00 PM
2
மறுமொழிகள்
Labels: இசை, இலக்கியம், எ.அ.பாலா கருத்து, பதிவர் வட்டம், மாமனிதர்கள்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
6/17/2013 12:55:00 PM
2
மறுமொழிகள்
Labels: அரசியல், எ.அ.பாலா கருத்து, பதிவர் வட்டம், மோதி
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
6/10/2013 12:25:00 PM
3
மறுமொழிகள்
Labels: Social Work, சமூகம், நண்பர்களுடன் சமூகசேவை, பதிவர் வட்டம்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
5/04/2013 02:08:00 PM
2
மறுமொழிகள்
Labels: அரசியல், எ.அ.பாலா கருத்து, சமூகம், பதிவர் வட்டம்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
2/17/2013 08:21:00 PM
3
மறுமொழிகள்
Labels: ச.சங்கர், சினிமா, பதிவர் வட்டம், விருந்தினர்
டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்
பிப் 7ஆம் தேதியன்று தினகரன் நாளிதழில் டோண்டு ராகவன் சார் பற்றிய தலையங்கம் வந்துள்ளது.
இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. எனது இந்த அஞ்சலி இடுகையில் டோண்டு சாரின் நண்பர்கள் / வாசகர்கள் தங்கள் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர் என்பதைத் தவிர்த்து, நான் அறிந்த வரையில் சுமார் 25 தமிழ் வலைப்பதிவர்கள் டோண்டு சாருக்கு அஞ்சலி இடுகைகளை சமர்ப்பித்துள்ளது, அன்னார் தனது எழுத்துகள், நேர்மை மற்றும் நட்பு பாராட்டும் இயல்பு வாயிலாக எத்தனை பதிவர்கள் / வாசகர்கள் மனதில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது! அந்த அஞ்சலி இடுகைகளின் தொடுப்புகளை எனது இடுகையின் இறுதியில் அளித்துள்ளேன்.
2. இன்று பொழுது போகாமல், டோண்டு சாரின் வலைப்பதிவில், எனது பெயரை கூகிளியதில், 60-க்கும் மேற்பட்ட இடுகைகளில் ஏதோ ஒரு விஷயத்துக்காக என்னை அவர் சுட்டியிருப்பதை இப்போது தான் முதன் முதலாக கவனிக்கிறேன். சிலவற்றை வாசிக்கையில் அவர் என் மேல் வைத்திருந்த அபிமானம் / நட்பு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது ! His death is a great personal loss to me!
எ.அ.பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
2/09/2013 04:59:00 PM
0
மறுமொழிகள்
Labels: டோண்டு, டோண்டு ராகவன், பதிவர் வட்டம், மாமனிதர்கள்
டோண்டு ராகவன் சார்
திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.
திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!
வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.
போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.
அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.
புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.
“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!
டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை
தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை
மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை
சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார்.
டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது
தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து
அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன்
மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது!
எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு --
டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!
எ.அ.பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
2/06/2013 09:46:00 PM
3
மறுமொழிகள்
Labels: டோண்டு, டோண்டு ராகவன், பதிவர் வட்டம், மாமனிதர்கள்
பிரபல வலைப்பதிவாளர், அருமை நண்பர் டோண்டு ராகவன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. என்னளவில் இது மிகப் பெரிய இழப்பு! இன்று காலை 11 மணி அளவில் தகனம்.
2004-ல் என் வலைப்பதிவை பார்த்து விட்டு, தானும் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றவன் என்று சொல்லி என்னுடன் அறிமுகமானார். அப்போது அவர் எனக்கு எழுதிய முதல் மடல் இது !
Triplicane memories and greetings from Dondu
From narasimhan raghavan
To
balaji_ammu@yahoo.com
Dear Balaji,
Yesterday I came to Triplicane. Had a leisurely walk down Pycrofts Road browsing the books in the platform shops. As I passed the Neeli Veerasami Chetty Street cutting, I thought of you but could not make it to your place as I do not know your address. It is also possible that you might have been still at office (5PM). If you have no objection, do email me your residential phone number and address. I will come to your place next time I come that side, if I may.
Do drop in at my place in Nanganallur. (20/B-23, 15th Cross Street, Hindu Colony, Opposite the new Nanganallur bus terminus).
You have my telephone numbers already.
Your blog about Vegundu was quite good.
Regards,
N.Raghavan
என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகியிருக்கிறார். நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவர். அசாத்தியமான மன உறுதி கொண்டவர். சுறுசுறுப்பின் இன்னொரு பெயர் டோண்டு என்று கூட சொல்லலாம். தமிழ் வலையுலகில் அவரது பிரபலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை! இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் கூட தன் வலைப்பதிவில் ஒரு இடுகையை பதிந்திருக்கிறார்! 8+ ஆண்டுகளில் சுமார் 1000 இடுகைகள் பதிந்திருப்பார் என்பது என் அனுமானம்.
புற்று நோயை எதிர்த்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர். அந்த கடினமான கால கட்டத்தில் கூட இயல்பாக இருக்கவே செய்தார் என்று நான் அறிவேன். இறுதி வரை கடுமையாக உழைத்திருக்கிறார். பல முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். என் குழந்தைகள் அவரது ரசிகைகள்! சமீபத்தில் (அவருக்குப் பிடித்தமானவார்த்தை இது!) மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா அவரை யாரென்று கண்டு கொண்டபோது, சந்தோஷம் அவருக்கு.
அந்த ஒரு முறை தான், நடப்பது கூட பிரயத்தனமாக இருப்பதாகக் கூறினார். அயற்சி என்றே கூறாதவர் அப்படி சொன்னபோது, மனது சங்கடப்பட்டது. எனது வலைப்பதிவு மூலம் செய்து வந்த சமூக உதவிகளுக்கு பெரிய ஊக்கமாக இருந்தவர். டோண்டு போல் ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனிமேல் பார்க்கப் போவதுமில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்கு மிகவும் பிடித்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்கிறேன்!
எ.அ.பாலா
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
2/06/2013 07:25:00 AM
75
மறுமொழிகள்
Labels: டோண்டு, டோண்டு ராகவன், பதிவர் வட்டம், மாமனிதர்கள்